11-06-2021, 12:26 PM
என்னை தேடி வரும்
துன்பத்திடம்
சிரித்துக்கொண்டே கேட்டேன்...
யாருக்கும் என்னை பிடிக்காமல் போக
உனக்கு மட்டும்
என்னை எப்படி பிடித்தது
அடிக்கடி வந்து சந்தித்து கொண்டே இருக்கிறாய்
என்று கேட்டேன்...
நான் வரும் பொழுதெல்லாம் சோர்ந்துவிடாமல்
என்னை எதிர்த்து நின்றாயே...
அந்த தைரியத்தை
ரசிக்க வந்தேன் ...என்றது...!!!
பத்மஸ்ரீ . ப
இளையாண்டிப்பட்டு கிராமம்
பொம்பூர் post
வானுர் taluk
விழுப்புரம் மாவட்டம்
தமிழ்நாடு - 605652