02-02-2018, 04:02 PM
கண்ணீரும் விழ வேண்டும்
அங்கே சிந்தும் அருவி போல் ஒரு சிறு துளியாக
வலிகள் பல வேண்டும்
அங்கே வெட்டுக்கள் பல கொண்டு ஜொலிகும் சிற்ப செதுக்கள் போன்று
காயங்கள் கொள்ளை வேண்டும் அங்கே பாரதி கண்டுணர்ந்த புரட்சி பெண்ணின் வழியாக
ஆனந்தம் குறைய வேண்டும் அங்கே சிதைபவனின் வியர்வையை,உதிரத்தை சுரண்டுவதில் இருந்து
இன்பம் விலக வேண்டும் அங்கே சேற்றில் நனைந்து நம் சோற்றில் கை நனைக்க வைத்தவனின் உழைப்பை திருடுவதில் இருந்துட
நட்பு தொலைய வேண்டும் அங்கே பிறர் பணியில் பிணியாற்றும்
சோம்பேறி தனத்தில் இருந்து
நாகரிகம் அழிய வேண்டும் அங்கே, மண்ணின் நயத்தை சீண்டும் திமிர் நிமிர்ந்த பிணி போன்று
ஆடை நீங்க வேண்டும் அங்கே, கண்ணை மூடும் சுயநல அரசியல் பட்டில் இருந்து
கனவை கலைக்க வேண்டாம் அங்கே நாங்கள் இனியும் தூங்கி கிடப்போம் என்ற மடத்தனத்தில் இருந்து